ஐரோப்பியாவை தொடர்ந்து ரஷ்யாவிலும் தாக்குதல்: தாக்குதல்தாரி சுட்டுக்கொலை

brusselsரஷ்யாவில் மர்ம நபர் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் சூர்குட் நகரத்திலே இத்தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இதில் 8 பேர் காயமடைந்துள்ளதாகவும், யாரும் உயிரிழக்கவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவயிடத்தில் இருந்தவர்கள் அவசர சேவைக்கு தகவல் அளிக்க, சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் தாக்குதலில் ஈடுபட்ட நபரை சுட்டுக்கொன்றுள்ளனர்.

தற்போது, தாக்குதல்தாரியின் அடையாளம் மற்றும் தாக்குதலுக்கான நோக்கம் குறித்து கண்டறியும் பணியில் சட்ட அமலாக்க துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், பின்லாந்து, ஜேர்மனியிலும் இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தப்பட்டது நினைவுக் கூறத்தக்கது.

-lankasri.com

https://youtu.be/mtfRsSPh5fI