விவசாயிக்கு ஆறுதல் தரும் விஜய் சேதுபதி

vijaysethupathiநாட்டில் ஒரு நல்ல காரியம் நடக்கிறதென்றால் அதற்கு முதல் மரியாதை செய்யத் துடிப்பவர் விஜய் சேதுபதி என்பதற்கு மேலும் ஒரு உதாரணம்.

கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் ‘கொலை விளையும் நிலம்’ என்றொரு விவசாயம் தொடர்பான ஆவணப்பட வெளியீட்டுக்கு வந்திருந்து அந்த படத்தின் பரவலான பார்வைக்கு சிறு உதவியாக இருந்தார் விஜய் சேதுபதி.

இப்போது விவசாயத்தின் மீதான விழிப்புணர்ச்சிக்காக பிக் பாஸ் போலவே ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் தமிழ்நாட்டிலிருக்கும் சில நடிகர் நடிகைகளும், வேறு துறை சார்ந்த பிரபலங்களும் சேர்ந்து விவசாயம் செய்வது போன்ற நிகழ்ச்சி.

தஞ்சை மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் அந்த நிகழ்ச்சியை துவங்கி வைக்க விஜய் சேதுபதியை அழைக்க, தனது டைட்டான ஷெட்யூலுக்கு நடுவிலும் வருவதாக ஒப்புக் கொண்டிருக்கிறார் அவர். சல்யூட்ணா!

-4tamilmedia.com