சம்பந்தன் இருக்கும் வரை மாற்றுத்தலைமை பற்றி பேசுவது சரியாக இருக்காது: சி.வி.விக்னேஸ்வரன்

viknewaranதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இருக்கும் வரையில், மாற்றுத்தலைமை பற்றி பேசுவது சரியாக இருக்காது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழர் அரசியலில் தற்போது மாற்றுத்தலைமைக்கான வெற்றிடம் காணப்படுகின்றதா? என்று ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளதாவது, “மாற்றுத்தலைக்கான வெற்றிடம் பற்றிய கேள்வி சிக்கலானது. தமிழ்த் தலைமை மக்களின் கருத்தினை அறிந்ததாக இருக்க வேண்டும். தற்போது நாம் அனைவரும் சம்பந்தனின் தலைமையின் கீழ் இருக்கின்றோம். அவர், பழுத்த அரசியல்வாதி. 84 வயதிலும் மிகவும் ஞாபகசக்தி கொண்டவர். எங்கு எது நடந்தாலும் சொல்லக்கூடியவர். அவர் உயிருடன் இருக்கும் வரையில் மாற்றுத்தலைமை பற்றிப் பேசுவது சரியாக இருக்காது.” என்றுள்ளார்.

-puthinamnews.com

TAGS: