ஜிஇ14: கெராக்கானின் தொகுதிகள் பரிமாற்றம்

gerakanகெராக்கான்   14வது  பொதுத்  தேர்தலில்   ஐந்து  தொகுதிகளை  பிஎன்  பங்காளிக்கட்சிகளுடன்  மாற்றிக்கொள்ளத்  திட்டமிடுவதாக   அதன்  தலைவர்  மா  சியு  கியோங்  கூறினார்.

“அதற்கான    பேச்சுகள்  பிஎன்  உயர்நிலையில்    நடக்கின்றன.  இறுதி  முடிவைப்  பிரதமரும்   பிஎன்  தலைவருமான   நஜிப்  ரசாக்  அறிவிப்பார்”,  என   நெகிரி  செம்பிலான்  கெராக்கான்   பேராளர்   கூட்டத்தைத்   தொடக்கிவைத்த  பின்னர்   செய்தியாளர்களிடம்   அவர்   தெரிவித்தார்.

கெராக்கான்      ஆய்வு   ஒன்றை   மேற்கொண்டதாகக்  கூறிய  மா,  அதில்    14வது  பொதுத்  தேர்தலில்  வாக்களிக்கத்   தகுதி  பெற்றவர்களில்   42விழுக்காட்டினர்   40-வயதுக்குக்   கீழ்ப்பட்டவர்கள்  என்பதும்   53-விழுக்காட்டினர்   யாருக்கு  வாக்களிப்பது   என்பதை  முடிவு  செய்யாதிருப்பவர்கள்  என்பதும்   தெரிய  வந்துள்ளதாகக்   குறிப்பிட்டார்.